Saturday, August 8, 2009

தத்துவம் என்றால் என்ன?

தத்துவம் என்பது மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது.

புலன் கடந்த அறிவாய்வியல், சமூக மதிப்பு தத்துவம் மற்றும் அறிவாய்வியல் ஆகியவை ஆகும்.

இதில் முதலாவது புலன் அறிவிற்கு அப்பால் உள்ளவற்றைப் பற்றிய ஆய்வதாகும்..அது யதார்த்தம், இருப்பு ஆகியவற்றின் தன்மையைப் பற்றிய தத்துவ ஆய்வாகும்.

இரண்டாவது சமூக மதிப்புகளின் தன்மை பற்றிய தத்துவ ஆய்வாகும்

மூன்றாவது அறிவின் தன்மைப் பற்றிய தத்துவ தத்துவ ஆய்வாகும்.




இருப்பியல் என்பது பொதுவாக இருத்தல் பற்றிய தாகும்.

இறையியல் தத்துவம் எண்பது கடவுள் மற்றும் கடவுள்கள் பற்றியதாகும்

அண்டவியல் தத்துவம் என்பது அண்டத்தைப் பற்றியது,

மாநுடவியல் தத்துவம் எந்பது மனித இயல்பு மற்றும் மனித இருப்பு பற்றியது.

அழகியல் என்பது கலையின் தத்துவம்

அறவியல்- அறம் பற்றிய தத்துவம்

சமூக மற்றும் அரசியல் தத்துவம்,




பொதுவாக யதார்த்தம், இருப்பு ஆகியவற்றைப் பற்றியது இருப்பியல் பற்றிய கேள்விகளாகும்/ பிரச்சனையாகும். ஏதாவது இருக்கிறதா அல்லது எதுவுமே இல்லையா?

என்பது மேற்கத்திய உலகின் கேள்வியாகும்.

முழுவதும் ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு சாத்தியமா?

எது உண்மையானது?

உண்மை என்பது அடிப்படையில் ஒன்றா அல்லது பலவா?

ஒன்றுக்கும் இரண்டுக்கும் பலவுக்கும் உள்ள உறவு என்ன?

மாறாதது என்று உண்டா?

யதார்த்தம் என்பதுஅடிப்படையில் பொருண்மையா அல்லது ஆன்மீகமா?

மிகவும் அடிப்படையானது இருப்பா அல்லது இன்மையா?





இந்திய தத்துவத்தில் எழுகின்ற கேள்விகள் பொதுவாக

அறுதியிட்ட ஒண்று என்று உண்மையில் இருக்கின்றதா?

துன்ப களில் இருந்து விடுதலை உண்டா?

துன்ப களில் இருந்து ஆன்மா விடுதலை பெறுவது எவ்வாறு?

ஆன்மா வின் இயல்பு என்ன?

பிரம்மாவிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள உறவு என்ன?

உடலுக்கும் மனதிற்கும் உள்மனதிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள உறவு என்ன?




கலை என்பது என்ன?

கலையையும் கலையற்றதையும், நம்பகதனமான கலையையும் நம்பகதனமற்ற கலையையும், நல்ல கெட்ட கலையையும், வேறுபடுத்திக் காட்டமுடியுமா?

அழகியல் தீர்வின் அளவீடுகள் என்ன?

கலையிண் நோக்கம் என்ன?

கலை எவ்வாறு அர்த்தப்படுகின்றது?




அறத்திந் அடிப்படை அளவுகோல் யாவை?

சரிக்கும், தவறுக்கும் உள்ள வேறுபாடு யாவை?





அரசின் தோற்றம், தன்மை, பயன்- தேவை யாவை?

தனிநபர், சமூகம், அரசு ஆகியவற்றிற்கிடையிலான உறவுகள் யாவை?

அறிவாய்வியலின் கேள்விகள்




அறிவின் இயல்பு யாது?

அறிவின் ஆதரங்கள் யாவை?

அறிவின் எல்லை எது?

அற்விற்கும் கருத்துக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

உண்மையின் தன்மை என்ன?

உண்மைக்கும் தவறுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

உண்மையை அறிய இயலுமா?


தத்துவ சிந்தனை -தத்துவ கட்டமைப்பு செய்வது, கட்டமைப்பு ஆய்வு செய்வது,,,

தத்துவ கேள்விகளுக்கு அறிவுபூர்வமான சரியான விடைகள் கட்டமைப்பது

அவ்வாறு கட்டமைக்கப்பட்ட பதில்களை ஆய்ந்தறிவது விளக்கமளிப்பது மதிப்பீடு செய்வது

அது திருப்தி அளிக்கவில்லை என்றால் மறுகட்டமைப்பு செய்வது

No comments: