Saturday, August 8, 2009

அனுபவவாதக் கொள்கை

அனுபவவாதக் கொள்கை


அறிவின் அனைத்துக் கூறுகளும் புலன் உணர்வு மூலமாகவே உருவாக்கப் படுகின்றன. எனவே அறிவின் தொடக்கமும் முடிவும் புலன் உணர்வே ஆகும். இது புலன் உணர்வை முதன்மையாகவும் சிந்தனையை இரண்டாம் பட்சமாகவும் மதிப்பிடுகின்றது.

புலங்களால் பெறப்படும் தகவல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. வெவ்வேறானவை. ஒன்றோடொன்று தொடர்பற்றவை. தொகுத்தல் மற்றும் பதிவு செய்தல் மூலமாகவே அத்தகவல்களுக்கிடையே பெறப்படும் அறிவு நிலையானதாகும் என்று விள்க்குவது அனுபவவாதம்.
philosophicaldebate

தத்துவம் என்றால் என்ன?

தத்துவம் என்பது மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது.

புலன் கடந்த அறிவாய்வியல், சமூக மதிப்பு தத்துவம் மற்றும் அறிவாய்வியல் ஆகியவை ஆகும்.

இதில் முதலாவது புலன் அறிவிற்கு அப்பால் உள்ளவற்றைப் பற்றிய ஆய்வதாகும்..அது யதார்த்தம், இருப்பு ஆகியவற்றின் தன்மையைப் பற்றிய தத்துவ ஆய்வாகும்.

இரண்டாவது சமூக மதிப்புகளின் தன்மை பற்றிய தத்துவ ஆய்வாகும்

மூன்றாவது அறிவின் தன்மைப் பற்றிய தத்துவ தத்துவ ஆய்வாகும்.




இருப்பியல் என்பது பொதுவாக இருத்தல் பற்றிய தாகும்.

இறையியல் தத்துவம் எண்பது கடவுள் மற்றும் கடவுள்கள் பற்றியதாகும்

அண்டவியல் தத்துவம் என்பது அண்டத்தைப் பற்றியது,

மாநுடவியல் தத்துவம் எந்பது மனித இயல்பு மற்றும் மனித இருப்பு பற்றியது.

அழகியல் என்பது கலையின் தத்துவம்

அறவியல்- அறம் பற்றிய தத்துவம்

சமூக மற்றும் அரசியல் தத்துவம்,




பொதுவாக யதார்த்தம், இருப்பு ஆகியவற்றைப் பற்றியது இருப்பியல் பற்றிய கேள்விகளாகும்/ பிரச்சனையாகும். ஏதாவது இருக்கிறதா அல்லது எதுவுமே இல்லையா?

என்பது மேற்கத்திய உலகின் கேள்வியாகும்.

முழுவதும் ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு சாத்தியமா?

எது உண்மையானது?

உண்மை என்பது அடிப்படையில் ஒன்றா அல்லது பலவா?

ஒன்றுக்கும் இரண்டுக்கும் பலவுக்கும் உள்ள உறவு என்ன?

மாறாதது என்று உண்டா?

யதார்த்தம் என்பதுஅடிப்படையில் பொருண்மையா அல்லது ஆன்மீகமா?

மிகவும் அடிப்படையானது இருப்பா அல்லது இன்மையா?





இந்திய தத்துவத்தில் எழுகின்ற கேள்விகள் பொதுவாக

அறுதியிட்ட ஒண்று என்று உண்மையில் இருக்கின்றதா?

துன்ப களில் இருந்து விடுதலை உண்டா?

துன்ப களில் இருந்து ஆன்மா விடுதலை பெறுவது எவ்வாறு?

ஆன்மா வின் இயல்பு என்ன?

பிரம்மாவிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள உறவு என்ன?

உடலுக்கும் மனதிற்கும் உள்மனதிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள உறவு என்ன?




கலை என்பது என்ன?

கலையையும் கலையற்றதையும், நம்பகதனமான கலையையும் நம்பகதனமற்ற கலையையும், நல்ல கெட்ட கலையையும், வேறுபடுத்திக் காட்டமுடியுமா?

அழகியல் தீர்வின் அளவீடுகள் என்ன?

கலையிண் நோக்கம் என்ன?

கலை எவ்வாறு அர்த்தப்படுகின்றது?




அறத்திந் அடிப்படை அளவுகோல் யாவை?

சரிக்கும், தவறுக்கும் உள்ள வேறுபாடு யாவை?





அரசின் தோற்றம், தன்மை, பயன்- தேவை யாவை?

தனிநபர், சமூகம், அரசு ஆகியவற்றிற்கிடையிலான உறவுகள் யாவை?

அறிவாய்வியலின் கேள்விகள்




அறிவின் இயல்பு யாது?

அறிவின் ஆதரங்கள் யாவை?

அறிவின் எல்லை எது?

அற்விற்கும் கருத்துக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

உண்மையின் தன்மை என்ன?

உண்மைக்கும் தவறுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

உண்மையை அறிய இயலுமா?


தத்துவ சிந்தனை -தத்துவ கட்டமைப்பு செய்வது, கட்டமைப்பு ஆய்வு செய்வது,,,

தத்துவ கேள்விகளுக்கு அறிவுபூர்வமான சரியான விடைகள் கட்டமைப்பது

அவ்வாறு கட்டமைக்கப்பட்ட பதில்களை ஆய்ந்தறிவது விளக்கமளிப்பது மதிப்பீடு செய்வது

அது திருப்தி அளிக்கவில்லை என்றால் மறுகட்டமைப்பு செய்வது

அறிவுமுதல் கொள்கை என்பது யாது?

பிறக்கும் போதே மனிதமனம் சில உள்ளார்ந்த கருத்துக்களைப் பெற்றுள்ளது. இக்கருத்துக்கள் முலமாகவே அனைத்து அறிவும் பெறப்படுகின்றது. மனம் செயலாற்றலும் அறிவாற்றலும் உள்ளது. உள்ளார்ந்த கருத்துக்களை பற்றி சிந்திக்க புலன்கள் மிக அரிதாகவே பயன்படுகின்றன. அறிவு உண்மையான சிந்தனையினால் அளிக்கப்படும் தெளிவான தனித்த கருத்துக்களிலேயே அடங்கியுள்ளது. புலனுணர்வால் அறிவை உண்டாக்கவும் இயலாது.

அறிவியல் முறைகள்

இடைக்கால சிந்தனையாளர்கள் தமது கருத்துலகில் மட்டுமே வாழ்ந்தனர். தம் சிந்தனைக்கேற்ப உலக அனுப‌வங்களை மாற்ற முயற்சி செய்தனர். அனுப‌வத்தின் அடிப்படையை ஆராயவோ அனுப‌வத்தின் அடிப்படையில் ஆராயவோ இல்லை.இடைக்கால சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை கையாண்டு வந்தனர். இதற்கு வித்திட்டவர் அரிஸ்டாடில் ஆவர்.பிந்தைய நூற்றாண்டில் நடந்தேறிய அறிவியல் எழுச்சி சிந்தனையாளர்களை அனுபவ உலகை நோக்கி ஈர்த்தது.உலகியல் அனுபவங்களிலிருந்து உண்மைகள் ஆராயப் பட்டன.அறிவியல் எழுச்சி சிந்தனைமுறையை மாற்றியது எனலாம். அனுபவ வாதக் கொள்கைகள் உருவாக்கப் பட்டன. இதற்கு வித்திட்டவர் பிரான்சிஸ் பேக்கன் என்பவர் ஆவர். இவரது அளவையியலான ஆன ஆய்வுமுறைகள் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டன.இப்போது தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார். பேக்கன் தொகுப்பளவை muraiயின் தந்தை எனப் போற்றப்பட்டார்.அப்போதிருந்த முதன்மையான தத்துவ பிரச்சினை என்னவென்றால் உண்மைகள் உறைந்து கிடக்கும் இடம் இயற்கையா அல்லது மனித மனத்திலா என்பதுதான்.சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை அறிவியல் ஆய்வுக்கு ஏற்றது என்றார் அரிஸ்டாடில். மாறாக‌ தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார்.சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை அறிவியல் ஆய்வுக்கு ஏற்றது என்றார் அரிஸ்டாடில். மாறாக‌ தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார்.தொகுப்பளவை முறை என்றால் என்ன?அனுவத்தை அணுகி ஆராய்தல், அனுபவத்திலிருந்து பொதுக்கருத்தை உருவாக்குதல், உருவாக்கிய கருத்தை பரிசோதித்துப் பார்த்தல், ஆகிய பல கூறுகளைக் கொண்டதொகுஇப்பள்வை முறைகளே உண்மையை வெளிக் கொணர வல்லவை என்பார் பேக்கன்.சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை அறிவியல் ஆய்வுக்கு ஏற்றது என்றார் அரிஸ்டாடில். மாறாக‌ தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார்.
philosophicaldebate

கான்ட்

கடந்த நிலை அளவையியல்- கான்ட்


அறிவைப் பெறுவதற்கான படிநிலைகள்

1.புலக்காட்சி

2. புரிதல்

3.சிந்தனை


புரிதல்களிலிருந்து கருத்துப் பொருட்கள் உருவாக்கப் படுகின்றன.

கருத்துப் பொருட்களிலிருந்து நாம் அறிவைப் பெறுகின்றோம்.


இடம், காலம் ஆகிய இரண்டும் புலனுணர்வுகளுக்கு முன்பான மனத்தின் புலச்சார்பற்ற அமைப்புகளாகும்.

இவை போலவே, புலக்காட்சிகளைத் தொடர்புபடுத்தி சிந்திப்பதற்கும் புரிந்துக் கொள்வதற்கும் பல்வேறு அமைப்புகள் மனத்தில் உள்ளார்ந்து இருக்கின்றன..

அவை தனிநிலைக் கருத்துப் பொருட்கள் அல்லது சிந்தனைக்கான கருத்தினங்கள் எனப்படுகின்றன.




பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய நம் புலன்களால் அளிக்கப்படும் தகவல்களை அல்லது புலன் உணர்வுகளை நம் உள்ளம் பதிவு செய்கின்றது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மட்டுமே அறிவாகா.


நம் மனம் இத்தகவல்களைப் பகுத்து அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட இடத்தில் காலத்தில் பொருத்துகின்றது. இவற்றிலிருந்து புலக்காட்சிகள் பெறப்படுகின்றன.


புலக்காட்சிகளிலிருந்து சிந்தனை மூலமாக அறிதலுக்கு உட்படுத்தி கருத்தினங்கள் உருவாக்கப் படுகின்றன.
philosophical debate

ஹெகல்

ஹெகல் ஹெகலின் இயக்கவியல்


ஹெகலுக்கு முந்தைய இயக்கவியல் முரண்பாடுகளை சுட்டிக் காட்டினாலும் ஹெகலியம் மட்டுமே பிரபஞ்சத்தை முழுமையாக விவரித்து கூறுயது.


கான்ட் அறிவின் முரண்பாடுகளை வெளிக்கொணர முடியுமே தவிர தீர்க்க வியலாது என கூறுவார்.

கான்ட் புலன் கடந்த இயங்கியலைப் பற்றிப் பேசுவார். ஹெகல் அதை உலகப் பொருள்களுக்கு விரிவுப்படுத்துவார்

philosophicaldebate

தனிமுதல் அறிவு -கான்ட்

அறிவு என்பது யாது? ஏற்புடைய அறிவு எது?எவை நிருபிக்ககூடிய அறிவோ அவையே ஏற்புடைமையுள்ள அறிவு என்றும் அந்த வகையில் அறிவியல் இயல்பான அறிவே நிருபிகககுடியவையாக இருப்பதால அவையே ஏற்புடைய அறிவு என்று முடிவு செய்கின்றார். இந்த அறிவு கணிததிலும் அறிவியலிலும் பெறப்படும் அறிவைப் பகுத்தாரய்து அவை புலன்காரா தொகுமுறை திர்ப்புகளை அடிப்படையாக கொண்ட கான்ட் தன் அறிவாராச்சியை விரிவாக்குகிறார்.
philosophicaldebate