Monday, May 18, 2009

கேக்கரவன் கேணயனா இருந்தா.....

இலங்கை ராணுவம் புலிகள் எல்லோரையும் கொண்ணுப்புட்டோம் என்று சொல்லிட்டு... காலையில் வெளியிட்ட போட்டோக்களை பார்த்தா பயங்கர டவுட் வருது!!! முதல் படம் சார்ல்ஸ் ஆண்டனியுடையது :

இவங்க எல்லாம் யாரு???








நான் பார்த்த வரை சில வித்தியாசங்கள் தெரியுது:
1. இறந்து கிடக்கும் மனிதரின் மீசை மிகவும் அடர்த்தியாக இருக்கு... ஆனால் சார்ல்ஸ்க்கு அப்படி இல்லை... 24 வயதுக்கான இள மீசை மட்டுமே!!!
2. புருவம் வில்லு மாதிரி பெருசா கடைசிவரை இருக்கு ஆனா முதல் போட்டோவில் அப்படி இல்லை!!
3. சார்ல்ஸ்க்கு காது விரிந்த காதுகளா இருக்கு, இறந்தவருக்கு அப்படி இல்லை என்றே தோன்றுகிறது..
.இப்படி பல வித்தியாசங்கள் இருக்கு... ஒரு வேளை இலங்கை ராணுவம் நம்ம கிட்ட 10 வித்தியாசம் கண்டுபிடிக்க போட்டி நடத்தறாங்களா??
பின் சேர்ப்பு:என் சந்தேகத்திற்கான முக்கிய காரணம், இதோடு குறைந்தபட்சம் 100 முறையாவது பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது...காலையில் சார்ல்ஸ் பிணம் அனாதையா கிடந்தது என்று ஆர்மி சொன்னது, பின்னர் நடேசன், ரமேஷ் மாஸ்டர் பிணங்களுடன் கிடைத்ததுன்னு சொன்னாங்க, அப்புறம், ஆம்புலன்ஸ்ல தப்பிக்க பார்த்த போது இவரையும் பிரபாகரனை கொன்றதா சொல்லறாங்க... அப்படியே வச்சுகிட்டாலும் ரெண்டுபேர் பாடியும் ஒன்னா தானே கிடக்கனும்... சார்ல்ஸ் பாடி மட்டும் தனியா ஒடி வந்துவிட்டதா.....பி.கு:சார்ல்ஸ் மாதிரி ஆள் கிடைத்ததால் போட்டோ போட்டுட்டீங்க... என்ன ராஜாக்களா... பிரபாகரன், நடேசன், பொட்டுஅம்மான் மாதிரி ஆட்கள் யாராவது இருக்கானான்னு தேடிக்கிட்டு இருக்கீங்களா போட்டோ போட... இல்ல ஆள் கிடைக்கலையா???நன்றி : கமெடி செய்திகள் தரும் ஆமி.லங்கா

thanx to : We The People

4 comments:

தோட்டா.!!! said...

இதாம் பெரிய சண்டை போட்டு சார்லசை கொன்று இருக்காங்க, ஆனா சட்டையில சிறு துப்பாக்கி ரவையின் ஓட்டைக்கூட கூட இல்லையே?

Unknown said...

சண்டைல விசியகாந்த் கலந்து இருப்பாரோ

Anonymous said...

அல்லாஹு அக்பர் !
அல்லாஹு அக்பர் !
அல்லாஹு அக்பர் !
எங்கள் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனை கொல்ல முடியாது.
அவர் சாகவில்லை,சாகவும் மாட்டார்!
அல்லா அவரை காப்பாற்றி வெற்றி திருமகனாக்குவார்!

Unknown said...

Madam Tussauds wax museum wanni'la irukkaamey...appdiyaa?